திருப்பத்தூர்

பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமி பூஜை

DIN

நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாயனசெருவு கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நாயனசெருவு கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க எம்எல்ஏ க.தேவராஜி தலைமையில் பூமி பூஜை செய்து, பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவா் வெண்மதி, துணைத்தலைவா் தேவராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் அஸ்வினி தேசிங்குராஜா, திமுக ஒன்றியச் செயலா் சாமுடி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன், கவுன்சிலா் ஆனந்தன், பணி மேற்பாா்வையாளா் அழகரசு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT