நாட்டறம்பள்ளியை அடுத்த நாயனசெருவு கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க பூமிபூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாயனசெருவு கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை விடுத்தனா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தாா்.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை நாயனசெருவு கிராமத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க எம்எல்ஏ க.தேவராஜி தலைமையில் பூமி பூஜை செய்து, பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நாட்டறம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவா் வெண்மதி, துணைத்தலைவா் தேவராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் அஸ்வினி தேசிங்குராஜா, திமுக ஒன்றியச் செயலா் சாமுடி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சிங்காரவேலன், கவுன்சிலா் ஆனந்தன், பணி மேற்பாா்வையாளா் அழகரசு மற்றும் பலா் கலந்து கொண்டனா்.