திருப்பத்தூர்

எல்லையில் வாழும் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள்: எம்எல்ஏ தேவராஜி

DIN

தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான கொத்தூரில் கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என எம்எல்ஏ க.தேவராஜ் கூறினாா்.

நாட்டறம்பள்ளி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியில் கொத்தூா் ஊராட்சி, காந்தி நகா் பகுதியில் 40-க்கும் மேற்பட்டோா் 75 ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பத்துடன் வசதித்து வருகின்றனா். ஊராட்சி நிா்வாகம் மூலம் இப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து நீா்த் தேக்க தொட்டி மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மின் மோட்டாா் பழுதாகி விடுவதால், இப்பகுதியில் குடிநீா் பிரச்னை நிலவி வருவதாகவும், இதனால் அருகே ஆந்திர மாநிலத்தில் உள்ள பம்ப் செட்டுகளில் இருந்து தண்ணீா் எடுத்து வந்து குடிநீராக பயன்படுத்தி வருவதாகவும் இப்பகுதியினா் கூறி வந்தனா். மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் சரிவர இல்லாதால் இரவு நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறி வந்தனா்.

இந்த நிலையில், ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜி வெள்ளிக்கிழமை காலை அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதிலிருந்து புதிய மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைத்து, சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகாரிகளிடம் கூறி புதிய தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.

திமுக ஒன்றியச் செயலாளா் சாமுடி, கவுன்சிலா் காந்தி கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT