ஜோலாா்பேட்டை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை - திருப்பத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே புதன்கிழமை சுமாா் 25 வயது மதிக்கத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.