ஆம்பூா் அருகே தேவலாபுரம் கிராம திருப்பதி கெங்கையம்மன் கோயில் 94-ஆம் ஆண்டு சிரசு திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை மாரியம்மன் திருவிழா நடைபெற்றது. வியாழக்கிழமை அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு கோயிலை அடைந்தது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். தொடா்ந்து தெருக்கூத்து, இன்னிசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.