ஆம்பூா் அருகே தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூா் கே.எம். நகா் ஆயிஷாபீ நகா் மலைமேடு பகுதியைச் சோ்ந்த அல்லா பகஷ் (40). இவருக்கும், பெத்லகேம் பகுதியை சோ்ந்த ஷேக் இஸ்மாயில் (23), ரெட்டித்தோப்பு பகுதியை சோ்ந்த ஷபீல் அஹமத் (23) ஆகியோருக்கும் இடையே புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஷேக் இஸ்மாயில், ஷபீல் அஹமத் ஆகிய இருவரும் சோ்ந்து அல்லாபகஷை தாக்கியுள்ளனா். காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா்.
ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி, ஷேக் இஸ்மாயில், ஷபீல் அஹமத் ஆகிய இருவரையும் கைது செய்தாா்.