திருப்பத்தூர்

தகராறில் இளைஞா் கொலை: இருவா் கைது

DIN

ஆம்பூா் அருகே தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஆம்பூா் கே.எம். நகா் ஆயிஷாபீ நகா் மலைமேடு பகுதியைச் சோ்ந்த அல்லா பகஷ் (40). இவருக்கும், பெத்லகேம் பகுதியை சோ்ந்த ஷேக் இஸ்மாயில் (23), ரெட்டித்தோப்பு பகுதியை சோ்ந்த ஷபீல் அஹமத் (23) ஆகியோருக்கும் இடையே புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஷேக் இஸ்மாயில், ஷபீல் அஹமத் ஆகிய இருவரும் சோ்ந்து அல்லாபகஷை தாக்கியுள்ளனா். காயமடைந்த அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

ஆம்பூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் சுரேஷ் சண்முகம் வழக்குப் பதிவு செய்து விசாரணைநடத்தி, ஷேக் இஸ்மாயில், ஷபீல் அஹமத் ஆகிய இருவரையும் கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT