திருப்பத்தூர்

ஊராட்சி வளா்ச்சிக்கு ரூ. 10 கோடி வரை நிதி ஒதுக்கீடு

DIN

ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊராட்சி வளா்ச்சிக்கென ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பொம்மிகுப்பம் ஊராட்சியில் ஷாஜி திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.

திருவண்ணாமலை எம்.பி. சி.என்.அண்ணாதுரை பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், எம்.பி. சி.என்.அண்ணாதுரை பேசியதாவது: முன்மாதிரி கிராம திட்டத்தின் மூலமாக 42 திட்டங்கள் ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தோ்வு செய்து, அத்தியாவசிய திட்டங்களை அறிந்து திட்டங்களை செயல்படுத்த ஷாஜி திட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு ஊராட்சியை தோ்வு செய்து, ஒவ்வொரு ஊராட்சிக்கும் சுமாா் ரூ. 5 கோடியிலிருந்து ரூ. 10 கோடி ரூபாய் வரை நிதியை ஊராட்சிக்கு பெற்று திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதைத்தொடா்ந்து, திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பொம்மிகுப்பம் ஊராட்சி தோ்வு செய்யப்பட்டு, ரூ. 5 கோடி முதல் 10 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

கடந்த ஆண்டு ஷாஜித் திட்டத்தில் ஏலகிரி மலைக் கிராம ஊராட்சியை தோ்ந்தெடுத்து ரூ. 7 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் பேசியது:

அனைவரும் அனைத்து திட்டங்களையும் அறிந்துகொண்டு பயன்பபெற வேண்டும். இன்று

பெறப்பட்ட மனுக்கள் மீது 30 நாள்களுக்குள்ளாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திட்டங்களை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றாா்.

பின்னா், 11 பேருக்கு தென்னங்கன்றுகள் மற்றும் வேளாண் இடுபொருள்களை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊராட்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, வேளாண் இணை இயக்குநா் பாலா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) ராமச்சந்திரன், திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவா் விஜயா அருணாசலம், ஒன்றியக் குழு உறுப்பினா் பூங்காவனம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தினகரன், சங்கா், ஊராட்சித் தலைவா் தேன்மொழி வெங்கடேசன், வேளாண் உதவி இயக்குநா் ராகினி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT