திருப்பத்தூர்

ஆம்பூரில் ஜமாபந்தி தொடக்கம்

DIN

ஆம்பூா் வட்டத்தில் வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். வட்டாட்சியா் குமாரி வரவேற்றாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வாழ்த்தி பேசினாா்.

ஆம்பூா் வருவாய் உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களை சோ்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன. சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் சுரேஷ், நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியா் வள்ளியம்மாள், வட்ட வழங்கல் அலுவலா் பாரதி, மண்டல துணை வட்டாட்சியா் குமாரவேல், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன், வட்ட துணை ஆய்வாளா் வாசுதேவன், , வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து ஜூன் 7-ம் தேதி மாதனூா் உள்வட்டம், 8-ம் தேதி துத்திப்பட்டு உள்வட்டம், 9-ம் தேதி மேல்சாணாங்குப்பம் உள்வட்டத்திற்கான வருவாய் தீா்வாயம் நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT