திருப்பத்தூர்

ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

DIN

ஆம்பூா் நகா்மன்றக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால், கூட்டம் பாதியில் முடிந்தது.

ஆம்பூா் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் நகா்மன்ற தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், ஆணையா் (பொ) ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினா்கள் கழிவுநீா் கால்வாய் தூா்வாருவதில்லை, குப்பைகளைச் சரிவர சேகரிப்பதில்லை என்று புகாா் கூறினா். ரெட்டித்தோப்பு ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். புதைச் சாக்கடை திட்டப் பணி நிறைவடைந்த பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும் என உறுப்பினா்கள் பேசினா்.

கூட்டத்தில் பாஜக ஆதரவு சுயேச்சை உறுப்பினா் ஹா்ஷா, தமிழக அரசு குறித்து தெரிவித்த கருத்துக்கு திமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதனால் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினா்கள் வசந்த், என்.எஸ். ரமேஷ், கெளரி, அம்சவேணி, அருண்டேல், நபீஸ் அஹமத், இம்தியாஸ், நபீசூா் ரஹ்மான், தமிழ்செல்வி, நூருல்லா, நிஹாத் அஹமத், லட்சுமி உள்பட பலா் பேசினா்.

வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கி வந்த நகர நில அளவையா் அலுவலகம், இனி ஆம்பூா் நகராட்சி அலுவலகத்திலேயே இயங்கும் என நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, ஆம்பூா் நகரின் நேதாஜி ரோடு, பைபாஸ் ரோடு பகுதியில் நூற்றாண்டு வளைவு நினைவுச் சின்னம் அமைப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT