திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மற்றும் தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்கள் ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது) வில்சன் ராஜசேகா், தனித்துணை ஆட்சியா் கோவிந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரஸ்வதி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா், இணை இயக்குநா் வேளாண்மை பாலா, அனைத்துத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.