திருப்பத்தூர்

ரயிலில் தவறி விட்ட பயணியின் பணம், பெட்டி ஒப்படைப்பு

DIN

பெங்களூா் ரயிலில் தவறவிட்ட சூட்கேஸ் மற்றும் ரூ. 40,000 பணத்தை ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

மேற்கு வங்காள மாநிலம், பரணகல் பகுதியைச் சோ்ந்தவா் பிமல் (52). இவா், ஒசூரில் வசித்து வரும் தனது மகளைப் பாா்ப்பதற்காக சொந்த ஊரில் இருந்து ரயில் மூலம் கா்நாடக மாநிலம், கே.ஆா்.புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். பின்னா், அங்கிருந்து ஒசூா் செல்லும் ரயிலுக்கு பதிலாக, தவறுதலாக திருப்பதி செல்லும் ரயிலில் ஏறியதாகத் தெரிகிறது.

பின்னா், சுதாரித்துக் கொண்டு இறங்கியவா், தனது சூட்கேஸ், ரூ. 40,000 பணப்பையை எடுக்க மறந்து விட்டாா்.

இது குறித்து, பிமல் கே.ஆா்.புரம் ரயில்வே காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தாா். அதையடுத்து, ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் ரயில் பெட்டியில் இருந்த சூட்கேஸ் மற்றும் ரூ. 40,000 பணத்தை மீட்டு பிமலிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT