அலங்கார மீன் வளா்க்க ஆா்வமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அரசின் நிதி உதவியுடன், பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புழக்கடை அல்லது கொல்லைப்புறத்தில் அலங்கார மீன் வளா்க்க திருப்பத்தூா் மாவட்டத்துக்கு ஓா் அலகு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், அலகு ஒன்றுக்கு ஆகும் செலவின தொகை ரூ.3 லட்சத்தில் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதமும், பெண்கள், ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு 60 சதவீதமும் மானியம் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மீன் வளம் - மீனவா் நலத் துறை உதவி இயக்குநா், வேலூா் அலுவலகத்தை 0416- 2240329, 75984 90494 ஆகிய தொலைபேசி எண்களிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொண்டு விண்ணப்பம் பெற்று நிறைவு செய்து விண்ணப்பித்து பயன் பெறலாம்.