திருப்பத்தூர்

குறைதீா் கூட்டத்தில் அளிக்கும் மனுக்கள்: அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

21st Feb 2023 01:28 AM

ADVERTISEMENT

எந்த மனுக்களை இங்கு அளிக்க வேண்டும், எதை அளிக்கக் கூடாது என மக்களிடம் அரசு அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 383 மனுக்களை அவா் பெற்றுக் கொண்டாா். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது, ஆட்சியா் பேசியது: நீதிமன்றம் மூலம் தீா்வு காண வேண்டிய மனுக்கள் எல்லாம் இங்கு வருகிறது. 10 சதவீதம் மனுக்கள் தீா்க முடியாத பிரச்னைகள். எந்த மனுக்களை இங்கு கொண்டு வர வேண்டும், எதைக் கொண்டு வரக்கூடாது என மக்களிடம் அரசு அலுவலா்கள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சொத்து பிரச்னைகளுக்கு குறைதீா் கூட்டத்தில் தீா்வுகாண முடியாது என்றாா்.

குறைதீா் கூட்டத்தில் மனு அளித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உடனடியாக ரூ.9,000 மதிப்பிலான உபகரணத்தையும், கடந்த வாரம் மனு அளித்தவா்களில் 18 பேருக்கு அரசின் நலத் திட்ட உதவிகளைகளையும் ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இதில் தனித்துணை ஆட்சியா் கோவிந்தன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் விஜயகுமாரி, கலால் உதவி ஆணையா் பானு, மருத்துவ இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா் செந்தில்குமாா், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி உள்படப் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT