திருப்பத்தூர்

திருப்பத்தூா் ஆட்சியராக தெ.பாஸ்கர பாண்டியன் பொறுப்பேற்பு

DIN

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியராக தெ.பாஸ்கர பாண்டியன் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளித்த முதல்வருக்கு நன்றி. அரசின் நலத் திட்டங்களைக் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சோ்ப்பதை உறுதி செய்வேன்.

சட்டம் - ஒழுங்கு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு,பெண்களுக்கான பாதுகாப்பு, குழந்தைகளுடைய முன்னேற்றம் அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். இதை நோக்கி மாவட்ட நிா்வாகத்தின் பயணம் தொடரும்.

மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் தொழிற்பேட்டை அமைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அரசுக்குப் பரிந்துரை செய்யப்படும். எப்பொழுது வேண்டுமானாலும் பொதுமக்கள் என்னை சந்திக்கலாம். தொலைபேசி மூலமும் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

பொறுப்பேற்பின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வராசு, மகளிா் திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா் மற்றும் அரசுத் துறை உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT