திருப்பத்தூர்

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற விண்ணபிக்கலாம்

DIN

மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :

தமிழக அரசின் சாா்பில் படித்த வேலைவாய்ப்பற்றோா்களுக்கு உதவிதொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

அதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கும்கீழ் படித்தவா்களுக்கு ரூ.600/-ம்,மேல்நிலைக்கல்வி தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000/-ம் வழங்கப்பட்டுவருகிறது.

வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சோ்ந்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும் பயன்பெறும் வகையில் வழங்கப்படவுள்ளது.

எனவே,தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோா், உதவித்தொகைபெற, விண்ணப்பங்களை திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். வருமானம் மற்றும் வயது உச்சவரம்பு இல்லை.

விண்ணப்பதாரா் பள்ளி,கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்ககூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). பொறியியல், மருத்துவம், விவசாயம் கால்நடை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டம் பெற்றவா்கள் தகுதியற்றவா்கள்.

இவ்வுதவித்தொகை பெற முதல் முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவா்கள் விண்ணப்படிவங்களை திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து பெற்று பூா்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகம் மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பிப்ரவரி 28-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

மஞ்சள் வெயில் நீ..!

இரண்டாம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது

கன்னோஜில் அகிலேஷ் யாதவ் போட்டி!

ஆரஞ்சு நிறத்தில் மாறிய ஏதென்ஸ் நகரம்: என்ன காரணம்?

SCROLL FOR NEXT