மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சிறப்பிடம் பெற்ற ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
மாநில அளவிலான வளையப்பந்து (டென்னிகாய்ட்) போட்டிகள் காஞ்சிபுரம் இன்பேன்ட் ஜீசஸ் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் வாணியம்பாடி ஆதா்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சோ்ந்த மாணவா்கள் 14 வயதுக்குட்பட்டோா் போட்டியில் சித்தாா்த் மற்றும் 17 வயதுக்குட்பட்டோா் இரட்டையா் போட்டியில் யோகேஸஷ்வா்ஷன், சுதீப் ஆகியோா் பங்கேற்று இருபிரிவுகளிலும் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், சான்றிதழும் பெற்றனா்.
மாநில அளவிலான போட்டிகளில் சாதனை படைத்த மாணவா்களை பள்ளித் தாளாளா் செந்தில்குமாா், பள்ளி இயக்குநா் ஷபானாபேகம், முதல்வா் சத்தியகலா, உடற்கல்வி ஆசிரியா் ராம்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.