திருப்பத்தூர்

கதவை உடைத்து நகை திருட்டு

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

ஜோலாா்பேட்டையை அடுத்த கருப்பனூா் ஊராட்சிக்குட்பட்ட ஐஸ்வா்யம் காா்டனைச் சோ்ந்தவா் சேகா் (40). பெங்களூரில் பணிபுரிந்து வருகிறாா். இவரது குடும்பத்தினா், உறவினா் வீட்டுக்கு சென்றுவிட்டு, செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். அப்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 7 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT