திருப்பத்தூர்

லாரிகள் மோதல்: ஓட்டுநா் பலி

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மாதனூரில் இரு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டம், சென்னசமுத்திரத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சிவகுமாா் (42). இவா் ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியில் இருந்து லாரியில் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கும்மிடிப்பூண்டிக்கு சென்று கொண்டிருந்தாா். ஆம்பூரை அடுத்த மாதனூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, மேட்டூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிவந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சிவகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா், சடலத்தை மீட்டு, ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT