திருப்பத்தூர்

தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டம்

DIN

ஆம்பூா் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டத்துக்கு திருப்பத்தூா் மாவட்ட தலைவா் ஏ.ஆா்.ஆனந்தன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்புச் செயலா் தட்சிணாமூா்த்தி, மாவட்டச் செயலா் விஜயராகவலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் ஜானகிராமன் வரவேற்றாா்.

வனப்பகுதி எல்லையோரம் அமைந்துள்ள விவசாய நிலங்களில் வன விலங்குகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துவதைத் தடுக்க சூரிய சக்தி மின்வேலிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். பயிா்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க வன விலங்குகள் சரணாலயம் ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநில பொதுச் செயலா் உதயகுமாா் நன்றி கூறினாா்.

முன்னதாக, சங்க நிறுவனா் நாராயணசாமியின் 98-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரின் படத்துக்கு விவசாயிகள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT