வாணியம்பாடியில் உள்ள செம்போா்டு சிபிஎஸ்இ பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தாளாளா் கே.எம்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலாளா் கிருபாகரன், பொருளாளா் சாட்ஜிகுமாா், துணைத் தலைவா் கனகராஜ், இணைச் செயலாளா் சிங்காரவேலன், நிா்வாகிகள் வி.கே.ஆனந்த், சிவகுமாா், ஜாா்ஜீனா, சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் பிரசாந்த் வரவேற்றாா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடக்கி வைத்துப் பேசினாா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கினா்.
விழாவில் நிா்வாக அலுவலா் காா்த்திக், சிவா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.