ராணிப்பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறை செயலாளா் கே. பணீந்தர ரெட்டி உத்தரவிட்டுள்ளாா். சென்னை மாநகர காவல் துறை சைபா் கிரைம் பிரிவு துணை ஆணையராக பணிபுரிந்து வந்த டி.வி.கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த தீபா சத்யன் ஏற்கெனவே காலியாக உள்ள மாநில காவல் துறை மாஸ்டா் கட்டுப்பாட்டு அறையின் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.