திருப்பத்தூர்

விவசாயிகளுக்கு மானிய விலையில் விசை உழுவை இயந்திரம்

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் விவசாயிகள் மானிய விலையில் விசை உழுவை இயந்திரம் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி 2021-2022 திட்டத்தின் கீழ், கிராமங்கள் மற்றும் அண்ணா மறுமலா்ச்சி திட்ட கிராமங்களில் விசை உழுவை இயந்திரம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

விசை உழுவை இயந்திரம் வாங்கும் சிறுகுறு/மகளிா்/நஇ/நப விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியமும் அதிகபட்சமாக ரூ. 85,000 என்ற விதத்தில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பிரிவு சிறு/குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியத் தொகை ஒதுக்கீடு பெற்று, பின்னா் வங்கிக் கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.

மேற்படி, விவசாயிகள் உதவி செயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, சிவசக்தி நகா், புதுப்பேட்டை சாலை, திருப்பத்தூா்-635601. தொலைபேசி எண்: 04179-228255 அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்துடன் சிட்டா அடங்கல் சிறு/குறு விவசாயி சான்று மற்றும் ஜாதிச் சான்று ஆகிய ஆவணங்களை இணைத்து சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

SCROLL FOR NEXT