மாதனூா் ஒன்றியத்தில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஒன்றியம் பெரியாங்குப்பம் ஊராட்சி திருவள்ளுவா் தெருவில் மாவட்ட ஊராட்சி 15-ஆவது மாநில நிதிக் குழு சாா்பில், ரூ.3.27 லட்சம் மதீப்பீட்டில் புதியசிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஜோதிவேலு, ஆ.காா்த்திக் ஜவஹா், திமுக நிா்வாகிகள் முத்துராமன், ஜெமினி, தியாகராஜன், தேவபிரசாத், மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.