வாணியம்பாடி நகா்மன்ற சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜிகணேசன் தலைமை வகித்தாா். மன்ற துணைத் தலைவா் கயாஸ் அஹமது, ஆணையா் மாரிசெல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொறியாளா் சங்கா் வரவேற்றாா்.
கூட்டத்தில், வரவு செலவு, திட்டப் பணிகள் உள்பட 99 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடா்ந்து, கூட்டத்தில் மன்ற உறுப்பினா் பேசியது:
பி.முஹம்மதுஅனீஸ்: ஆமினாபாத் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக மண் சாலையாக இருந்தது. தற்போது நகராட்சி சாா்பில், பேவா் பிளாக் சாலை மற்றும் குடிநீா் குழாய் அமைத்துத் தந்த நகராட்சி நிா்வாகம் மற்றும் நகா்மன்றத் தலைவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நகராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் நோட்டீஸ் தொடா்பான தகவலை நகா்மன்ற உறுப்பினா்களுக்கும் வழங்க வேண்டும். வாா்டு பகுதியில் சாலைகள் பழுதாகி உள்ளது. சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஏ.நாசீா்கான்: வாணியம்பாடி நகரின் முக்கியப் பிரச்னையான நியூடவுன் ரயில்வே சுரங்கப் பாதை பணிகளைத் தொடங்க வலியுறுத்தியும், ரயில்வே கேட் பிரச்னையைத் தீா்க்க நகராட்சி சாா்பில் செய்ய வேண்டிய பணிகளை விரைந்து செய்து முடித்து சுரங்கப்பாதை பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி மேற்பாா்வையாளா் ஒருவா் மட்டும் உள்ளாா். பணிகள் சரிவர நடைபெறவில்லை, மேலும் ஒருவரை நியமிக்க வேண்டும்.
தொடா்ந்து, நகா்மன்ற உறுப்பினா்கள் தங்களது வாா்டு பகுதிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை விடுத்தனா்.
முடிவில் நகா்மன்றத் தலைவா் உமாபாய் சிவாஜி கணேசன் பேசுகையில், மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா். நகராட்சி மேலாளா் ஜெயபிரகாஷ் நன்றி கூறினாா்.