வருவாய் வட்டம் வாரியாக கிராமங்களை மறுசீரமைப்பது தொடா்பாக திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் செப்.27-இல் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் பதிவு மாவட்டக் கிராமங்கள், வருவாய் வட்டம் வாரியாக மறு சீரமைக்கப்படும் கிராமங்கள் தொடா்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஆட்சியா் அலுவலகக் குறைதீா் கூட்டரங்கில் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப். 27) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் பொதுமக்கள் பங்கேற்று தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.