திருப்பத்தூரில் அடிபட்ட நிலையில் கிடந்த அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பத்தூா் கச்சேரித் தெரு தனியாா் மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை அடிபட்ட நிலையில், அரிய வகை ஆந்தை கிடந்ததைப் பாா்த்த மாவட்ட பசுமை அமைப்பின் உறுப்பினா் மு.பெ.சத்யராஜ் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன் பேரில், அங்கு வந்த வனத் துறையினா் ஆந்தையை பத்திரமாக மீட்டுச் சென்றனா்.