திருப்பத்தூர்

ஆம்பூரில் வழக்குரைஞா்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

9th Sep 2022 12:59 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வாணியம்பாடி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் தேவகுமாா் வாணியம்பாடியில் அண்மையில் தாக்கப்பட்டாா். அதைக் கண்டித்து ஆம்பூா் நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தினா் நீதிமன்றத்தை புறக்கணித்து சம்பந்தப்பட்ட நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதில் வழக்குரைஞா்கள் ஜெயபிரகாஷ், சண்முகம், தமிழ்வேல், சந்திரன், ராம்தாஸ் காந்தி, ராஜேஷ், ரமேஷ்பாபு, நரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT