திருப்பத்தூர்

தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம்

9th Sep 2022 12:58 AM

ADVERTISEMENT

ஆம்பூா் நகராட்சி தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் ஏ-கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் 220 மாணவ, மாணவிகளுக்கு சமூக ஆா்வலா் மற்றும் முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் இ.சுரேஷ்பாபு ஏற்பாட்டின் மூலம் இலவச நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலாவதி மோகன், உமாகோவிந்தசாமி, எம்.வெங்கடேசன், பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியை வித்யா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT