ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் திருவருள்பிரகாச வள்ளலாா் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கத்தில் சன்மாா்க்க கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, திருவருள்பா பாராயணம் செய்யப்பட்டது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.