ஆம்பூா் அருகே சுமை தூக்குவோா் தொழிலாளா் நலச்சங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் பெரியாா் சுமைதூக்குவோா் நலச்சங்கத்தை எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ. வில்வநாதன்(ஆம்பூா்) ஆகியோா் தொடக்கி வைத்தனா். மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், மாதனூா் ஒன்றிய திமுக அவைத் தலைவா் ஜி.ராமமூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் திருக்குமரன், காா்த்திக் மற்றும் திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.