வாணியம்பாடி அருகே அமைந்துள்ள அதிதீஸ்வரா் கோயிலில் சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானம் பகுதியில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆயுத பூஜையொட்டி, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றன.
இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிளிலிருந்து மாணவா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்து கொண்டு வழிபட்டனா். இரவு 7 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி தேதி கோயில் வளாகத்தில் வலம் வந்தாா்.