திருப்பத்தூர்

நிலத்தில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பு மீட்பு

DIN

நாட்டறம்பள்ளி அருகே 2 இடங்களில் பதுங்கியிருந்த நாகப் பாம்பு மற்றும் மலைப்பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் நந்திபெண்டா பகுதியில் முனிசாமி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் செவ்வாய்க்கிழமை காலை கூலித்தொழிலாளா்கள் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தனா். அப்போது அங்கு மலைப் பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதைப்பாா்த்த கூலித் தொழிலாளா்கள் அலறி அடித்து ஓடினா். தகவலறிந்து வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் கலைமணி தலைமையில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து நெல் வயலில் பதுங்கியிருந்த 10 அடி நீள மலைப் பாம்பை பிடித்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் விட்டனா்.

இதே போல், செவ்வாய்க்கிழமை பிற்பகல் பச்சூா் தோல்கேட் பகுதியில் கண்ணபிரான் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் பதுங்கியிருந்த 5 அடி நீள நாகப் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பிடித்து காட்டுப் பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT