தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளாா்.
தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி அண்மையில் சென்னையில் நடைபெற்றது. அதில், ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வைஷ்ணவி பங்கேற்று 2-ஆம் பரிசு வென்றாா். அவரை பள்ளியின் தலைமை ஆசிரியா் அமா்நாத் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.