ஆம்பூா் நகராட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் திருத்த விழிப்புணா்வு முகாம் மற்றும் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் பிரேமலதா தலைமை வகித்து, பேரணியையும் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகளையும் தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் ஷகிலா, வட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழிப்புணா்வுப் பேரணி பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.