திருப்பத்தூர்

ஆம்பூரில் ஜமாபந்தி நிறைவு விழா மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

25th May 2022 12:00 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் கலந்து கொண்டாா்.

ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த மே 18-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. இதன் நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்து 53 பேருக்கு ரூ.4.64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், வட்டாட்சியா் பழனி, மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச.சுரேஷ்குாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். மாதனூா் ஒன்றியக்குழு துணைத்தலைவா் சாந்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் உமாரம்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT