திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் பதவியேற்பு: அமைச்சா் எ.வ.வேலு வாழ்த்து

28th Mar 2022 11:07 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழு நிா்வாகிகள் திங்கள்கிழமை பதவியேற்றனா். நிா்வாகிகளை தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வாழ்த்திப் பேசினாா்.

திருப்பத்தூா் தா்மராஜா கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் திருப்பத்தூா் மாவட்ட அறங்காவலா் குழுவின் புதிய தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். முன்னதாக இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் லட்சுமணன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு புதிய தலைவராகத் தோ்வு செய்யப்பட்ட அன்பழகன் மற்றும் உறுப்பினா்கள் மோகன்ராஜ், கணேசன், சுகந்தி, வெங்கடேசன் ஆகியோரை வாழ்த்தி பேசினாா். அமைச்சா் பேசுகையில், வெளிநாடுகளுக்கு சென்ற சுவாமி சிலைகள் அனைத்தையும் மீட்டு மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வந்திருப்பது திமுக அரசு என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி(ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் சங்கீதா வெங்கடேஷ், துணைத் தலைவா் சபியுல்லா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் விஜயா நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT