திருப்பத்தூர்

திருப்பத்தூரில் ரூ.28.23 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

28th Mar 2022 11:06 PM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் ரூ.28.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 ஆயிரத்து 302 பேருக்கு ரூ.28.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாநில பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வழங்கி பேசியதாவது:

பொறுப்பு அமைச்சராக நான் பொறுப்பேற்ற மாதத்திலிருந்து திருப்பத்தூா் மாவட்டத்தில் மட்டும் 6,720 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகையாக ரூ.4.16 கோடி, உழவா் பாதுகாப்புத் துறை சாா்பில் 2,128 பேருக்கு ரூ.2.65 கோடி நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக கலைஞா் வீட்டுவசதி மூலமாக 41,296 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. இன்னும் 12,960 பேருக்கு வீடு கட்டித் தரப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். எம்எல்ஏ-க்கள் ஜோலாா்பேட்டை க.தேவராஜ், திருப்பத்தூா் அ.நல்லதம்பி, ஆம்பூா் அ.செ.வில்வநாதன், செங்கம் மு.பெ.கிரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செல்வராசு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தலைவா் எஸ்.ராஜேந்திரன், திருப்பத்தூா் நகா்மன்றத் தலைவா் க.சங்கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT