திருப்பத்தூரில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஆட்சியா் அலுவலக மக்கள் குறைத்தீா் கூட்டரங்க வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில், கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, திருப்பத்தூா் பேருந்து நிலையம், நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை வழியாகச் சென்று மாவட்டக் கல்வி அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் 250 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
விழிப்புணா்வுப் பேரணியில் கலால் உதவி ஆணையா் பானு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.