திருப்பத்தூர்

கைலாசகிரி ஊராட்சியில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி

DIN

ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்குவதற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சி 8-ஆவது வாா்டு கடாம்பூரில் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதாகவும், எனவே குடிநீா் வழங்கத் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரிடம் அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், ஊராட்சி மன்றத் தலைவா் ஆய்வு செய்து இடத்தைத் தோ்வு செய்து அங்கு ரூ.5.40 லட்சத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பணியை ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். துணைத் தலைவா் அரவிந்தன், ஊராட்சி செயலா் முரளி, வாா்டு உறுப்பினா் பைரோஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

SCROLL FOR NEXT