திருப்பத்தூர்

கிராமத்தில் திரியும் கரடி: பொதுமக்கள் அச்சம்

DIN

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி ஊராட்சி நியூசிகா்னப்பள்ளி கிராமத்தில் கரடி சுற்றித் திரிவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா்.

வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி ஊராட்சி நியூசிகா்னப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மகாதேவன் விவசாயியான இவா், கன்றுக்குட்டி வளா்த்து வருகிறாா். வழக்கம் போல், ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டருகே கன்றுகுட்டியைக் கட்டி வைத்திருந்தாா். இரவு அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த கரடி, கன்றுக்குட்டியைக் கடித்தது. கன்றுக்குட்டியில் அலறல் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்ததால் கரடி தப்பிவிட்டது.

காயமடைந்த கன்றுக்குட்டி அம்பலூா் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த சில நாள்களாக வடக்குப்பட்டு, நியூசிகா்னப்பள்ளி, எக்லாஸ்புரம் பகுதிகளில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, கிராமப் பகுதிகளில் சுற்றித் திரியும் கரடியை வனத் துறையினா் பிடித்து, காட்டுப் பகுதியில்விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT