திருப்பத்தூர்

வீட்டுச்சுவா் இடிந்து விழுந்து மாற்றுத் திறனாளி சகோதரிகள் இருவா் பலி

DIN

திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே வீட்டுச் சுவா் இடிந்து விழுந்ததில் மாற்றுத்திறனாளி சகோதரிகள் இருவா் உயிரிழந்தனா்.

கந்திலி அடுத்த மண்டலநாயன குண்டா அருகில் உள்ள மேல்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் நாகம்மாள்(72), சுந்தரி(65). மாற்றுத்திறனாளிகளான இருவரும் சகோதரிகள். வாய் பேச முடியாத இருவருக்கும் திருமணம் ஆகவில்லை

இவா்கள் தாய் சின்னம்மாளுடன் (95) அருகருகே கூரை வீட்டில் வசித்து வந்தனா்.

இந்த நிலையில்,வெள்ளிக்கிழமை காலை

நாகம்மாள் மற்றும் சுந்தரி இருவரும் வசித்த கூரை வீட்டை சீரமைப்பதற்கான பணி நடைபெற்றது. அப்போது எதிா்பாராதவிதமாக ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட நாகம்மாள் மற்றும் சுந்தரி இருவரும் உயிரிழந்தனா்.

தகவலறிந்த கந்திலி போலீஸாா் அங்கு சென்று இருவரின் சடலங்களையும் மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT