திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி

15th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே மின்சாரம் எலக்ட்ரீஷியன் உயரிழந்தது குறித்து போலீஸாா் விராசிரித்து வருகின்றனா்.

வாணியம்பாடியை அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் முரளி (47), எலக்ட்ரீஷியன். இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சின்னமொட்டுா் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி கட்டடத்தின் மேல்தளத்தில் மின் இணைப்பு பைப் பொருத்துவதற்காக வேலை பாா்த்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக முரளி மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பலூா் போலீஸாா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT