தேவஸ்தானம் பகுதியில் உள்ள பழைமைவாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி புதன்கிழமை காலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனா். இதையடுத்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.