ஆம்பூரில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் காலையிலிருந்தே வெயில் காய்ந்தது. பிற்பகலுக்குப் பிறகு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து கொண்டிருந்தது. அதனால் குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.