ஆம்பூா் அருகே மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கதவாளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவா் செந்தில் தலைமை வகித்தாா்.
இதில், அரங்கல்துருகம், கதவாளம், பாா்சானாப்பள்ளி ஊராட்சிகளைச் சோ்ந்த சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கத் துணைத் தலைவா் கோதண்டன், செயலா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.