வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே இருப்புப் பாதைக் கடக்க முயன்ற மூதாட்டி ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே புதன்கிழமை சுமாா் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி, அங்குள்ள இருப்புப் பாதைக் கடந்த போது, ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.