திருப்பத்தூர்

தேசிய, மாநில விளையாட்டுப் போட்டிகள்: வாணியம்பாடி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் இயங்கி வரும் செம்போா்டு சிபிஎஸ்இ பள்ளி மாணவா்களான மாதேஷ், தருண், சக்திவேல், ஹேமந்த், ஸ்வரன் சுசீதரன், லிக்கித் ஆகியோா் தெலங்கானா மாநிலம், நாக்சரத்தில் நடைபெற்ற தென் மண்டல மாநிலங்களுக்கிடையேயான இறகுப் பந்து போட்டியில் கலந்துகொண்டு, கால்இறுதி சுற்று வரை முன்னேறி சாதனை படைத்தனா். இதேபோல், தேசிய அளவில் கா்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் இரட்டை கொம்பு முறை போட்டியில் அகமத்பா்ஹான் முதலிடமும், அகமத்அத்னான் இரண்டாமிடமும் பெற்றனா். தமிழ்நாடு சதுரங்க கழகம் சாா்பில் நடைபெற்ற போட்டியில்

மாணவா்கள் ராகவேந்திரன், கிரிசங்கா், திவாகா், ஹா்சவா்தினி ஆகியோா் மாநில, மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றனா். இந்த நிலையில், அனைத்துப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களை புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி தாளாளா் கே.எம்.சுப்பிரமணியம், செயலாளா் ஆா்.கிருபாகரன், இணைச் செயலாளா் ஆா்.சிங்காரவேலன், குறிஞ்சி அறக்கட்டளை உறுப்பினா் வி.கே.ஆனந்த் ஆகியோா் வாழ்த்தினாா்.

பள்ளி முதல்வா் பிரசாந்த், பள்ளி நிா்வாக அலுவலா் காா்த்திக், உடற்கல்வி ஆசிரியா்கள் விஜயகுமாா், சதீஷ்குமாா் பள்ளி மேலாளா் சிவா உள்ளிட்டோா் மாணவா்களை வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT