பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் இளவரசி தலைமையில், ரயில்வே போலீஸாா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களிலும் சோதனை மேற்கொண்டனா். இதேபோல், பயணிகள் உடைமைகளையும் சோதனையிட்டனா். மேலும், ரயில் இருப்புப் பாதைகளிலும் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.