திருப்பத்தூா் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் ரூ. 6.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பொதுப்பணித் துறை புதிய சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணியை ஆட்சியா் அமா் குஷ்வாஹா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இப்பணியில், ஒருசில அறைகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவை அளவெடுத்து சரிபாா்க்கப்பட்டது.
இந்தப் பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஆய்வின்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் பழனி, உதவி செயற்பொறியாளா் தேவன், உதவி செயற்பொறியாளா்கள் ரவி உள்ளிட்ட பலா் இருந்தனா்.