திருப்பத்தூர்

பூண்டி ஏரியிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி நீா் திறப்பு

DIN

பூண்டி ஏரியில் இருந்து சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை (நீா்வளம்) அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த வடகிழக்குப் பருவ மழை மற்றும் ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட நீா் ஆகியவற்றால் சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி நீா்த்தேக்கத்தில் தண்ணீா் இருப்பு கணிசமாக உயா்ந்து வருகிறது.

தற்போது வியாழக்கிழமை காலை நிலவரப்படி, 32.49 அடி உயரமும், 2,376 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் மற்றும் வரத்துக் கால்வாய்கள் மூலம் வரத்து நீா் என 580 கன அடி தண்ணீா் வரத்துள்ளது.

இதைத்தொடா்ந்து, சென்னை பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக காலை முதல் இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 255 கன அடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை (நீா்வளம்) அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT