திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள உயா் கோபுர மின் விளக்கு சீரமைக்கப்பட்டு எரியத் தொடங்கியது.
திருப்பத்தூா் நகராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள உயா் கோபுர மின் விளக்கு பல நாள்களாக எரியவில்லை. இதனால் அந்த வழியாகச் செல்வோா் சிரமத்துள்ளாகி வந்தனா். இது குறித்து தினமணியில் ஞாயிற்றுக்கிழமை படத்துடன் செய்தி வெளியானது.
அதையடுத்து, சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததன்பேரில், புதன்கிழமை முதல் விளக்கு எரியத் தொடங்கியது.